Skip to content

நாம் ஏன் வீழ்ந்தோம்?

சமகால முஸ்லிம் உலகில் நிலவும் அறிவுசார் பின்னைடைவு போன்ற கசப்பான உண்மைகளைச் சுட்டிக்காட்டி, அதிலிருந்து மீள்வதற்கான தீர்வுகளை இந்நூல் வழங்குகிறது.

Category Article
Publisher நாணல்
Language Tamil
Format Paperback

Description

கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய “நாம் ஏன் வீழ்ந்தோம்?” எனும் நூல், அல்குர்ஆனின் சமூகவியல் சிந்தனைகளை மிக ஆழமாக அலசும் ஒரு காத்திரமான படைப்பாகும். ஒரு காலத்தில் ஆன்மீகத்திலும் அறிவியலிலும் சிகரம் தொட்டு, அகிலத்திற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த முஸ்லிம் சமூகம், இன்று எல்லாத்துறைகளிலும் நலிவுற்று இருப்பதற்கான காரணங்களை இச்சிறுநூல் அல்குர்ஆனின் ஒளியில் தர்க்கரீதியாக ஆராய்கிறது. இந்த வீழ்ச்சியானது சமூகம் தனது வேதநூலில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படைக் சமூகவியல் கோட்பாடுக ளிலிருந்து விலகிச் சென்றதன் நேரடி விளைவே என்பதை இந்நூல் ஆணித்தரமாக நிறுவுகிறது.
முஸ்லிம் உம்மத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களை வரலாற்றுப் பின்னணியுடன் ஆசிரியர் விளக்கியுள்ள விதம், வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவதோடு, சமகால முஸ்லிம் உலகின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளவும் பெரிதும் உதவும். இந்நூல் முஸ்லிம் சமூகம் மீண்டும் எழுச்சி பெற அவசியமான ஒன்பது அடிப்படைப் பண்புகளை மிகத் தெளிவாக முன்வைக்கிறது.
சமகால முஸ்லிம் உலகில் நிலவும் அறிவுசார் பின்னைடைவு போன்ற கசப்பான உண்மைகளைச் சுட்டிக்காட்டி, அதிலிருந்து மீள்வதற்கான தீர்வுகளை இது வழங்குகிறது ஆக, ‘நாம் ஏன் வீழ்ந்தோம்?’ என்பது ஒரு வரலாற்றுப் புலம்பல் அல்ல; மாறாக, சமகால முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் இருத்தலியல் நெருக்கடிகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் ஒரு தவிர்க்கவியலாத அறிவுசார் கையேடு.