Skip to content

ரஜியா சுல்தானா

₹220₹198
10% OFF

இந்திய வரலாற்றில் அரியணையில் அமர்ந்த மிகச் சில பெண் அரசிகளில் ஒருவரான ரஜியா சுல்தானாவின் வீரஞ்செறிந்த வாழ்க்கையை மிகத் துல்லியமாக விவரிக்கும் நாவல்.

Category Novel
Publisher நாணல்
Language Tamil
Pages 196
Year 2026
Format Paperback
Tags History
SKU 978-81-997283-6-3

Description

'நூன்' (ஷேக் அப்துல் காதிர்) எழுதிய 'ரஜியா சுல்தானா' என்ற இந்த வரலாற்று புதினம், இந்திய வரலாற்றில் அரியணையில் அமர்ந்த மிகச் சில பெண் அரசிகளில் ஒருவரான ரஜியா சுல்தானாவின் வீரஞ்செறிந்த வாழ்க்கையை மிகத் துல்லியமாக விவரிக்கிறது. 196 பக்கங்களைக் கொண்ட இந்நூல். ஒரு மாபெரும் சரித்திரத்தின் சாரத்தை வாசகர்களுக்கு எளிமையாகவும் சுவைபடவும் கொண்டு சேர்க்கும் ஆவணம், ஆணாதிக்கச் சமூகம் மேலோங்கியிருந்த காலத்தில், தனது அபூர்வ ஆற்றலால் தனித்து விளங்கிய ஒரு வீராங்கனையின் எழுச்சியையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும் ஆசிரியர் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இந்த நூல் ரஜியாவின் நிர்வாகத் திறன், அறிவுத் தெளிவு. நீதி மற்றும் நேர்மை உணர்வு ஆகியவற்றை முதன்மைப்படுத்திக் காட்டுகிறது. தனது தந்தை சுல்தான் ஷம்சுத்தீன் இல்தூமிஷால் வாரிசாக அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து, துருக்கிய அமீர்களிடையே ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் அந்தப்புரச் சூழ்ச்சிகளை அவர் எப்படித் துணிச்சலுடன் எதிர்கொண்டார் என்பதை விறுவிறுப்பாக விளக்குவதோடு. குறிப்பாக, அடிமையான ஜமாலுத்தீன் யாகூத் உடனான நட்பு மற்றும் அமீர் அல்தூனியாவுடனான போர் மற்றும் திருமணம் போன்ற வரலாற்று நிகழ்வுகள் மிகவும் உணர்ச்சிகரமான முறையில் இதில் கூறப்பட்டுள்ளன. மனிதாபிமான முகத்துடன் தனது குடிமக்களை ஒரு தாய் தனது பிள்ளைகளைப் பேணுவது போலக் காத்து வந்த ஒரு தலைவியின் மனப் போராட்டமே இந்த நூலின் கருவாகும்.

ஆசிரியர் நூனின் எழுத்து நடை மிகவும் எளிமையாகவும், வரலாற்றுத் தகவல்களைச் சுவைபடக் கூறும் விதத்திலும் அமைந்துள்ளது. போர்க்களக் காட்சிகள், அந்தப்புர இரகசியங்கள் மற்றும் அரசியலின் நுணுக்கமான சூழ்ச்சிகள் என அனைத்தையும் வாசகர்கள் கண்முன்னே நிறுத்துகிறார். முப்பத்து மூன்று ஆண்டுகளே வாழ்ந்த ஒரு வீராங்களை, ஒரு ஆணாதிக்க சமூகத்தில் தனது துணிவாலும் புத்திசாலித்தனத்தாலும் எப்படிப் போராடினார் என்ற வரலாற்றைச் சொல்லும் ஒரு நீதிக் கதையைப் போல இந்த நூல் விரிகிறது. வரலாற்றையும் மனிதாபிமானத்தையும் குழைத்துத் தந்துள்ள விதம் உண்மையில் பாராட்டத்தக்கது.