Skip to content

அளவீடற்ற மனம்

₹250.00

ஜே. கிருஷ்ணமூர்த்தியின் 'அளவீடற்ற மனம்' புத்தகம் எண்ணங்களின் குழப்பத்திலிருந்து விடுபட்டு, மன அமைதியை அடைய உதவும் தத்துவார்த்த வழிகாட்டி.

Category Essay
Publisher நர்மதா பதிப்பகம்
Language Tamil
Year 2015
Format Paperback
Tags Philosophy , Psychology , Self-Help

Description

வாழ்க்கையை நடத்திச்செல்ல, நம்மிடம் இருக்கும் ஒரே கருவி எண்ணம் மட்டும் என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், பன்னெடுங்காலமாய் கருதப்படுகிறது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட அக்கருத்தை, முற்றிலுமாக தகர்த்தெறிகிறார் கிருஷ்ணமூர்த்தி. தனி நபருக்குள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே, பெருங்குழப்பத்தை எண்ணம் விளைவிக்கிறது என்று அவர் எடுத்துரைக்கிறார். வாழ்வின் வளங்களைப் பெறுவதில், எண்ணம் மனிதனுக்குப் பெருமளவில் உதவுகிறது என்பதில் சந்தேகமேதும் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் எண்ணத்திற்கு உரிய இடம் உள்ளது. ஆனால், உளவியல் பிரச்சனைகளுக்கு எண்ணம் பெற்றுத்தரும் தீர்வுகள், பிரச்சினைகளை மேலும் பன்மடங்காக்குகிறது.வன்முறை முரண்பாடு, மனக் காயங்கள், பாதுகாப்பின்மை, பயம், துக்கம், களிப்பு போன்ற உணர்வுகளே நம் செயல்பாடுகளின் அடித்தளமாய் அமைந்துள்ளன. இவ்வுணர்வுகளையும், அவற்றின் வெளிப்பாட்டினால் உண்டாகும் பிரச்சினைகளையும் கையாள எண்ணத்திற்கு ஆற்றல் இல்லை என்பதை இந்நூலில் கிருஷ்ணமூர்த்தி நன்கு விவரிக்கிறார். வேறுபட்ட சூழ்நிலையில் நிகழ்பவை மூலமாக, எண்ணமே பிரச்சினைகளை உருவாக்கியும், அவற்றை தொடரச் செய்வதையும் நிருபிக்கிறார். பிரச்சினைகளை எதிர்கொள்ள எண்ணத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட உபகரணம் எதாவது இருக்கிறாத என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். புது தில்லி, கல்கத்தா, மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் அக்டோபர் 1982-க்கும் ஜனவர் 1983-க்கும் இடைப்பட்ட நாட்களில் அவர் நிகழ்த்திய பேச்சுகள் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சத்தினுள் இருக்கும் மனம்’ எனும் அருமையான கண்ணோட்டத்தையும் அவர் இந்நூலில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆழ்ந்த அக்கறையுடன் அதை ஆராய்ந்தால் அந்த ஒரு விஷயம் நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை உணர முடியும். இதை மிக இயல்பாகத் தன் உரையின் மூலம் உணர்த்திவிடுகிறார் ஜே.கே. வெவ்வேறு அம்சங்களை முன்னிட்டுச் சிந்திப்பதெல்லாம் ஒரே புரிதலை நோக்கி, மகத்தான விழிப்புணர்வை நோக்கி நம்மை இட்டுச்செல்வதை இந்த உரைகளின் மூலம் உணர முடிகிறது. பிரச்சினைகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவற்றின் ஊற்றுக்கண்கள் மனித மனத்தின் செயற்கையான விகாரங்களில்தான் இருக்கின்றன. அவற்றுக்கான தீர்வும் அங்கேயேதான் இருக்கும் என்னும் உண்மையை அநாயாசமாகக் காட்டுகிறார் ஜே.கே. ‘நெஞ்சத்தினுள் இருக்கிறது மனம்’ உரை முக்கியமானது.