ஓஷோ 1000: ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்…
ஓஷோவின் 1000 பொன்மொழிகள் அடங்கிய புத்தகம்! மனதிற்கு அமைதி தரும் தத்துவங்களை தமிழில் படிக்க இன்றே வாங்குங்கள்.
| Category | Compilation |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Philosophy , Self-Help , Spirituality |
Description
மனதை நல்ல நூலகளின் பக்கம் திருப்பினால் மருத்துவமனை தேவையில்லை, மருந்து கடை தேவையில்லை, சுகர் ஃப்ரீ தேவையில்லை, மிகவும் ஆரோக்கியமாகவே இனிப்புகளைச் சுவைத்து மகிழலாம். இதோ - ஒஷோ என்ற மனோதத்துவ நிபுணர் மனதிற்கு ஒய்வு கொடுக்க 1000 தத்துவங்களை அள்ளி வழங்கியிருக்கிறார் மனதையும் மனிதத்தையும் வாழ்க்கையில் எப்படி வழிநடத்திச் செல்வது என்ற பல புதிய சூட்சுமங்களை மயிலிறகால் வருடுவது போன்று மென்மையாகச் சொல்லியிருக்கிறார். நிச்சயமாக எவ்வளவு படித்த பெற்றோர்களாக இருந்தாலும், பேராசிரியர்களாக இருந்தாலும் இந்த அளவு தெளிவான ஞான மார்க்கத்தை காட்டுவார்களா எனபது சந்தேகமே. அந்த அளவிற்கு உலக அளவில் “தத்துவங்களின் தந்தையாக இந்த ஒஷோ விளங்குகிறார்உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி ஒஷோவின் 1,000 பொன்மொழிகள் அடங்கிய புத்தகம். பொன்மொழிகள் சிந்தனையைத் துண்டுகின்றன்.மாதிரிக்கு சில பொன்மொழிகள்:-* கையில் மாற்று மருந்து இருக்கிறது என்பதற்காக, யாரும் விஷத்தை சாப்பிட்டு சோதனை செய்து கொள்ள் வேண்டாம்.* அச்சம், கவலை, நோய் ஆகிய மூன்றும் மனிதனின் வலிமையை அழிப்பவை.*வாள் தன் உறையை வெட்டாது.* நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன், தன்மைக்கு ஒரு பாம்பின் வால் கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொள்ளத்தான் பார்ப்பான்.இவ்வாறு 1000 பொன்மொழிகள் கொண்ட இந்தப் புத்தகம் ஒரு சிந்தனைக் களஞ்சியம்.
