மகாத்மா காந்தியின் சிந்தனைகள்
காந்தியின் ஆழமான சிந்தனைகளை தமிழில் படியுங்கள். சுயராஜ்யம், சத்தியம் மற்றும் அகிம்சை பற்றிய அவரது தத்துவங்களை அறிந்திடுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நேஷனல் புக் டிரஸ்ட் |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Indian History , Philosophy , Political Science |
Description
எனது எழுத்துகளைக் கவனமுடன் பயில்வோருக்கும் அவற்றில் அக்கறை காட்டும் மற்றவருக்கும் நான் சொல்ல விரும்புவது இதுவே: எனது சிந்தனை முரணற்று இருக்கவேண்டும் என்பது பற்றி நான் கவலைப்படவேயில்லை. சத்தியத்தை நாடும் எனது முயற்சியில் நான் எத்தனையோ கருத்துக்களை கைவிட்டு விட்டேன்; புதியன பலவற்றைக் கற்றிருக்கிறேன். வயதில் முதியவனாகி விட்டதால் என் மனத்தின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவோ, எனது வளர்ச்சியானது தசைகளின் தளர்ச்சியினால் நின்றுவிடும் என்றோ நான் நினைக்க வில்லை. எனது அக்கறையெல்லாம், கணத்துக்குக் கணம் நான் கடவுளென நம்பும் சத்தியத்துக்கு நான் கீழ்ப்படியத் தயாராக இருக்கவேண்டும் என்பதுவே. எனவே எனது இரண்டு படைப்பு களில் முன்னுக்குப்பின் முரண்பாடு தெரிந்தால், வாசகர்களுக்கு எனது மதியின் தெளிவில் இன்னும் நம்பிக்கை இருப்பின், இரண்டு கருத்துக்களில் காலத்தால் பிற்பட்டதையே அவர்கள் ஏற்றுக் கொளல் நலம்.- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
