Skip to content

மண்ணும் மனிதர்களும் (நற்றிணை)

₹150.00

குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த நூல் ஒரு சிறந்த சுயசரிதை.

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Biography , Religious Leaders , Tamil Literature

Description

தவத்திரு குன்றக்குடி அடிகளார் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன்.அரங்கநாதன் நான்காம் வகுப்பு பயிலும் போது ரா.பி. சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன் நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அவரது வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வில் ஒன்று கலந்த திருக்குறள். பின்னாளில் அடிகளாரான பிறகு அவருக்குப் பொதுநெறி ஆகியது.இதே போன்று அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோளாகப் பதியக் காரணமானவர் விபுலானந்த அடிகள்.இவர் ஆதீன குருபூஜை விழாவொன்றில் பங்கேற்று சொற்பொழிவாற்ற நேர்ந்தபோது அவரின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடி திருமட ஆதீனகர்த்தர் இவரை ஆதீன இளவரசராக்கினார்.ஆதீன இளவரசர் ஆகி மூன்று ஆண்டுகளுக்குப் பின் 1952 இல் குன்றக்குடி ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பேற்று 45 வது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தன் திருப்பணிகளால் அடிகளார் ஆகி. ஊர்ப்பெயர் இணைய குன்றக்குடி அடிகளார் ஆனார்.