Skip to content

ஆகாயத் தாமரை

₹140₹133
5% OFF

அசோகமித்திரன் எழுதிய ஆகாயத் தாமரை - மனித உறவுகள், மனோதத்துவம் மற்றும் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்தும் சிறந்த நாவல். ரகுநாதன் வாழ்க்கைப் போராட்டத்தை இதில் காணலாம்.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2013
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேகிதி மாலதி. அவன், தன் கஷ்ட காலத்தில் மாலதி ஏதாவது செய்வாள் என்று நினைக்கிறான். அவள் ஒன்றும் செய்யாமல் தன் வழியே சென்று விடுகிறாள். வாழ்க்கையில் யாரும் யாருக்கும் ஒன்றும் செய்துவிட முடியாது. தானே தன் வாழ்க்கையை அதன் வழியிலேயே வாழ்ந்தாக வேண்டும் என்ற பொதுவிதிதான் ஆகாயத் தாமரையை முன்னெடுத்துச் செல்கிறது.

- சா. கந்தசாமி