Skip to content

நொய்யல் (நற்றிணை பதிப்பகம்)

₹560₹532
5% OFF

தேவிபாரதி எழுதிய நொய்யல் (நற்றிணை பதிப்பகம்) - குமரப்ப பண்டிதன் கதாபாத்திரத்தின் மூலம் வாழ்க்கை, கல்வி, ஜோதிடம் குறித்த நுண்ணறிவுகளைப் பெறலாம். நாவல் விமர்சனம்!

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தேவிபாரதியின் இந்நாவல் முக்கியமானதென்று எனக்குத் தோன்றுவது இதில் அந்த அதீதங்கள் வெளிப்படும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையும் அவர்களின் தீவிரமும் அதிகம் என்பதனால்தான்.

காரிச்சிக்கு நிகராகவே முக்கியமானவர் குமரப்ப பண்டிதன், அவர் வாழ்க்கையின் ஒரு வரைகோட்டுச் சித்திரத்தை தேவிபாரதி அளிக்கிறார். அதனூடாகத் தன்னுடைய ஒவ்வொரு எல்லையையும் அவர் கடந்து போவதைக் காண முடிகிறது.

எளிய குடிநாசுவனாகப் பிறந்து கல்வியினூடாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து, உள்ளுணர்வையும் கல்வியையும் இணைத்துக்கொள்ள முடிந்தமையால் ஜோதிடம் வழியாக காலங்களைக் கடந்து பார்க்கும் கண்கள் பெற்று. அதன் பின்னரும் தன்னை ஒரு எளிய நாசுவனாகவே பார்க்கும் சூழலில் காலூன்றி நின்றிருக்க வேண்டிய குமரப்ப பண்டிதன். ஒரு காலகட்டத்தின் முழுத் துயரத்தையும் வெளிப்படுத்துபவராகவும் மானுடத் துயரங்கள் அனைத்தையும் தன் ஞானத்தால் கடந்து உச்சத்தைக் காட்டுபவராகவும் இந்நாவலில் வெளிப்படுகிறார்.

-ஜெயமோகன்