Skip to content

வல்லிசை

₹300₹285
5% OFF

அழகிய பெரியவன் எழுதிய வல்லிசை - சாதி மற்றும் இசையின் உறவை கேள்விக்குள்ளாக்கும் நாவல். பறை இசையின் வரலாறு, சமூகப் போராட்டங்கள் மற்றும் விடுதலை குறித்த ஆழமான பார்வை.

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 320
Year 2016
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

உலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன். ஒரு கணம்தான். அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கின்றன. இப்போது பறையிசை என்னை சினம்கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது. பறை தோற்கருவிகளின் பொதுப்பெயர். ஆனால், அது சிலர் மட்டுமே இசைத்திடும் கருவியாக எப்படிச் சாதியோடு பிணைக்கப்பட்டது.

இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம். சாதி வேறுபாடும் இருக்குமா ? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி. இது அனைவரும் அறிந்தது. ஆனால், விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன். அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பர்வச்செய்யும். நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காயந்தபடி அதை உணர்ந்துகொண்டிருப்பேன்

- அழகிய பெரியவன்