Skip to content

ஈழ யுத்தத்தின் சாட்சிகள்

₹130.00

ஈழ யுத்தத்தின் சாட்சிகள்: போரின் கொடூரமான உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு மனதை உலுக்கும் புத்தகம்.

Category Report
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Year 2017
Format Paperback
Tags Social Impact of War , Sri Lankan Civil War , War Crimes

Description

ஒரு தாய், அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கிறது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்தத் தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது. அவள் அப்படியே குழந்தையின் மேல் தன் முகத்தைப் புதைத்து செத்துக்கிடந்தாள். தாய் இறந்தது குழந்தைக்குத் தெரியவில்லை. பசி ஆறாத குழந்தை பால் இல்லாது வறண்டு போன மார்புக் காம்பினை சப்பிப் பார்த்துவிட்டு ஒன்றும் வராததைக் கண்டு கதறிக் கொண்டிருந்தது.