Skip to content

இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்

₹400.00

இந்திய மற்றும் தமிழ் தத்துவ மரபுகளைப் பற்றி பொ. வேல்சாமி எழுதிய புத்தகம். சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஆராய்கிறது.

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Year 2024
Format Paperback
Tags History , Philosophy , Religion , Social Sciences , Tamil Culture

Description

சமண, பௌத்த மதங்களின் வழியாகத் தான் தமிழ்மொழி உலகறியப் பெருமைபெற்றது என்ற வரலாற்று உண்மையைத் திரித்து அம்மதங்கள். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்ததாகக் கூசாமல் புளுகுவார்கள். ஒரு கட்டத்தில் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் எதிரிகள் மறைத்துவிட்டனர் என்று அழுகுணி ஆட்டம் போடுவார்கள். இன்றைய வாழ்க்கையில் மக்கள் சந்தித்து வருகின்ற சமூகப் பொருளாதார பிரச்சனைகள் பல உள்ளன. இந்தப் பிரச்சனைகளில் சிக்குண்டு அல்லல்பட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றதைக் காண்கின்றோம். இவ்வாறு மக்களை வாட்டுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சிந்தனைகளை முன்னிறுத்தி உரையாடுவதுதான் மக்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்களுக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற மன வேகம்கொண்ட அறிஞர்களுக்கும் நியாயமான செயலாக இருக்க முடியும்.- பொ.வேல்சாமிதமிழ்நாட்டு வரலாற்றில் மதரீதியான போராட்டங்களே இல்லை; வெள்ளையர்கள் + கொள்ளையர்கள் + கொலைகாரர்கள்; தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் யார்? பழந்தமிழ் இலக்கியம் கூறும் யானைக்கறி விருந்து; முட்டை முந்தியதா கோழி முந்தியதா? கடவுள் இல்லாத சமயம்; சமண, பௌத்த மதங்கள் தமிழ்நாட்டில் ஓரங்கட்டப்பட்டதும் ஒழிக்கப்பட்டதும் ஏன்? பிராமணரான நச்சினார்க்கினியர் நான்கு வேதங்களை ஏன் மறுத்தார்? சைவ சித்தாந்தம் என்பது தமிழருக்கேயான தத்துவ மரபா? உள்ளிட்ட அரசியல், தத்துவ உரையாடல்களை உரிய தரவுகளுடன் விளக்கும் தகவல் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது. இத்துறைகளில் ஆய்வுகளை நிகழ்த்திட பல ஆய்வுக் களங்களையும் திறந்துவிடுகிறது