தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும்
கடற்பயணங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள், 1506-1813
1506-1813 காலகட்டத்தில் தென்கிழக்காசியாவில் தமிழ் வணிகர்களின் பங்கு, வணிக உறவுகள் பற்றி அறிய இந்த புத்தகத்தை வாங்குங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History , Tamil Diaspora , Trade |
Description
இந்த நூல் மலாக்காவிலும் மணிலாவிலும் தமிழ் வணிகர்களின் கப்பல்கள். வங்கித்தொழில், வணிக மேலாண்மை (1506-1705), மற்றும் ஜாவாவின் பெண்டன் துறைமுகத்தில் சைவ, வைணவ. இஸ்லாமியத் தமிழ் வணிகர் வணிக வளர்ச்சி (1552-1682) பற்றி விரிவாக அலசுகிறது. சுமத்ராவின் பசாய், பெதிர், அச்செ சுல்தானியர்களுக்கும் சோழமண்டலக் கடற்கரைக்கும் இடையிலான வணிகத்தொடர்பு பரவியது (1511-1813) பற்றி விவரிக்கிறது. தமிழகத்தின் கடற்கரைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் வணிக அறிமுகம் மற்றும் தொடர்ந்தது (1512-1767) பற்றி விளக்கப்பட்டுள்ளது. மலாயாவிலுள்ள கேடாவின் சுல்தான். பேராக் சுல்தான் அரசாட்சியில் தமிழ் இஸ்லாமிய வணிகர்கள் வணிகம் இயங்கியது, பினாங்குத் தீவில் வணிகம் (1786-1809) தொடங்கியது பற்றி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. பெந்தகரா (பிரதம மந்திரி), ஷா-பந்தர் (துறைமுக அதிகாரி), துமன்கங்க் (காவல் அதிகாரி – வரி வசூலிக்கும் அதிகாரி). லக்சமன (கப்பல்படைத் தலைவர்) பதவிகளில் பல தமிழ் வணிகர்களின் நியமனங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்றும், தென்கிழக்காசியாவின் மன்னர்கள் 1506-1813 காலகட்டத்தில் அளித்த ஊக்கம், ஆதரவு பற்றியும் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
