திசையறியா சூத்திரர்கள்
₹30.00
திசையறியா சூத்திரர்கள்: இந்திய பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, அரசியல் நிலை குறித்து காஞ்சா அய்லய்யாவின் ஆழமான கட்டுரை.
| Category | Essay |
|---|---|
| Publisher | நிகர்மொழி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Indian History , Politics , Social Justice , Sociology |
Description
திசையறியா சூத்திரர்கள்” என்னும் இந்நூல், செப்டம்பர் 2018ஆம் ஆண்டு The Caravan ஆங்கில இதழில் வெளியான, காஞ்சா ஐலையா ஷெப்பர்ட் அவர்கள் எழுதிய “Where are the Shudras?” என்ற கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில், இந்திய விடுதலைக்கு முன்பிருந்த காலம் தொட்டு மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டதற்கு பின்பான தற்காலம் வரை இந்தியா எங்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு, தொழில், சமயம், கல்வி போன்ற சமூக, பொருளாதார, அரசியல் களங்களில் மிகவும் குறைவான பிரதிநிதித்துவத்தையே பெற்றிருப்பதையும், அதற்கான காரணங்களையும், தீர்க்கும் வழிகளையும் தேர்ந்த ஆய்வு மற்றும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைக்கிறார்.
