Skip to content

அண்டனூர் சுரா சிறுகதைகள் 100 (இரண்டு தொகுதிகள்)

₹810₹769
5% OFF

அண்டனூர் சுரா எழுதிய அண்டனூர் சுரா சிறுகதைகள் 100 - சமூக முரண்களையும், மனித உணர்ச்சிகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Pages 962
Year 2025
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism
SKU 9788199156531

Description

அண்டனூர் சுராவின் நூறு சிறுகதைகளுக்கும் உருக்கொடுத்த ஓவியன் என்கிற முறையில் சொல்கிறேன், இவரது கதைகளின் ஆழத்தைக் கலைமொழியில் ஓவியமாக மொழிபெயர்ப்பது ஒரு சவாலான செயலாக இருந்தது. அவரது எழுத்துகளின் சாயல்கள், மனித உணர்ச்சிகளின் பல்துறை அம்சங்கள், நேர்க்கோட்டுச் சிந்தனையில் இருந்து விலகிய, சமூக முரண்களின் மீள் தரிசனம் இவற்றை ஒவ்வோர் ஓவியத்திலும் உணர்வுகளின் நிழலாகப் பதிவு செய்துள்ளேன். கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியா நூறு சிறுகதைகளும் நூறு ஜன்னல்களைத் திறந்து வெவ்வேறு மனித வாழ்வை நமக்குக் காட்டுகின்றன. இந்தச் சமூகத்தின் புரையோடிப்போன நோய்களான சாதிய ஏற்றத்தாழ்வு. தீண்டாமைக் கொடுமை. பெண் அடிமைத்தனம், பாலியல் வன்முறை. பட்டினித் துயரங்கள். மதவெறி. வர்க்க ஆதிக்கம், கந்து வட்டிக் கொடுமைகள் போன்றவற்றைத் தோலுரிக்கின்றன. தனிப்பட்ட மனிதர்களின் மெய்மைத்தன்மை சிதையாமல் செதுக்கப்பட்டுள்ளன. மருத்துவர் த. அறம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.