Skip to content

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்

₹180.00

விக்ரமாதித்யனின் கவிதைகள், வாழ்வின் காதல், கழிவிரக்கம், அபத்தங்களை நவீன மனிதனின் பார்வையில் சொல்கிறது.

Category Poetry
Publisher படைப்பு பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback

Description

விக்ரமாதித்யன் பாடு பொருள்களில், வாழ்வின் மீதான காதலும் கழிவிரக்கமும் கூடிக் கலந்து இருக்கின்றன. அவரது கவி மொழியில் மிகை நாடல் இல்லை. தந்திமொழிபோலச் சொற் கட்டுமானங்களை அடுக்குகிறார். வாழ்வின் கதியில் நவீன மனிதன் அன்றாடம் எதிர்கொள்ளும் அபத்தங்களையும் தோல்விக ளையும் எழுதுகிறார். அறிவை நாடிப் பிறகு அதிலிருந்து விடுபட்ட அனுபவ ஞானத் தேட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டவராக இருக்கிறார். அவரது இந்தத் தொகுப்பிலும் மாறாத விக்ரமாதித்யனின் தனித்துவமான உள்ளொளிப் பெருக்கும் மொழிமனம் ஒளிர்கிறது. இருமை எதிர்கொண்ட தன்னிலை வழியே வாசகனுக்கு ஒரு எளிய மார்க்கத்தைச் சமைக்க எண்ணுகிறார்.~ஆகாசமுத்து