திராவிட மாடல் முன்னேற்றியதா?
கி. வெங்கட்ராமன் எழுதிய 'திராவிட மாடல் முன்னேற்றியதா?' நூல், திராவிட மாடலின் பின்னணியில் உள்ள அரசியல் சதித்திட்டங்களை அம்பலப்படுத்துகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பன்மை வெளி |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Social Commentary , Tamil Nationalism , Tamil Politics |
Description
தமிழ் மொழியை இழிவுபடுத்திப் பின்னுக்குத் தள்ளி -"ஆங்கிலத்தைத் திணித்து, தமிழினத்தை மறுத்து இல்லாத திராவிட இனத்தை முன்னிறுத்தி, தமிழர் வரலாற்றை "திராவிட" வரலாறாகத் திரித்து, ஆரிய இந்தியத்தின் அழிவுத் திட்டங்களை தமிழ்நாட்டிற்குள் அடக்குமுறை துணை கொண்டு நுழைத்து, தமிழ் மக்களை தமிழர் தாயகத்திற்குள்ளேயே ஏதிலியராக்கி, இந்தியத்தேசிய வளர்ச்சிவாதத்திற்கான பணிகளை திறம்பட மேற்கொள்வதே 'திராவிட மாடல்" தி.மு.க. அரசு!வெவ்வேறு துறைகளில், இதற்காக நடைபெறும் சதித் திட்டங்களைக் கூரிய பார்வையுடனும், மறுக்க முடியாத சான்றுகளுடனும் அம்பலப்படுத்தி, தமிழ்த்தேசிய வெளிச்சம் பாய்ச்சும் வகையில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட் ராமன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே “திராவிட மாடல் முன்னேற்றியதா?" என்ற இந்நூலாகும்.
