Skip to content

ஆல்பர்ட் சுவைட்சரின் சுயசரிதை

₹230.00

ஆல்பர்ட் சுவைட்சரின் சுயசரிதை! மகாத்மா காந்தியுடன் ஒப்பிடத்தக்க ஒரு தத்துவஞானியின் வாழ்க்கை வரலாறு.

Category Biography
Publisher பரிசல்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Autobiography , Biography , Philosophy

Description

என்றைக்கும் பெரிய மனிதர்களாக இருக்கக்கூடியவர்களாக இந்தக் காலத்தில் இரண்டு பெயர்கள் சொல்ல வேண்டுமானால் நமக்கு முதலில் மனத்தில் தோன்றக்கூடிய பெயர்கள் மகாத்மா காந்தியும் மகாத்மா சுவைட்சரும் தான்.- க.நா.சுப்ரமண்யம் (மொழிபெயர்ப்பாளர்)பிரபல இந்திய சிந்தனையாளர்கள் பற்றி வெளிவந்த என் புத்தகத்திற்காக (Indian Thought and its Development, 1936) क्री சிந்தனைகளை ஆராய்வதில் அதிக நேரம் செலவிட்டேன். அவற்றின் கருத்துக்கள் என் மனத்தில் வேரூன்றின... திருக்குறள் என்னும் நூலின்பால் எனக்கு அளவு கடந்த மதிப்பு. அதன் ஒழுக்கமுறைத் தத்துவம், மானிடரின் உயர்ந்த பண்புகளை உணர்த்துவது ஆகும். குறள் பாக்களில் பலவற்றை மனப்பாடம் செய்துள்ளேன். அவை என் இதயத்தில் நிலைபெற்றிருக்கின்றன. குறளை நான் அறிந்தது எனக்கோர் உன்னதமான அநுபவமே. அதன் அடிப்படைத் தத்துவத்திற்கு சம்பந்தப்பட்ட, வாழ்க்கையில் மதிப்பு, மரியாதை என்னும் என் அடிப்படைக் கொள்கை, தென்னிந்திய மொழிகளிலும் அறியப்படுவது என் பாக்கியமே. இதை என்னால் நம்பக் கூட முடியவில்லை.ஆல்பர்ட் சுவைட்சர் (1957)'ஆல்பர்ட் சுவைட்சர் - என் வாழ்வும் சிந்தனையும்' என்கிற இந்த நூலைப் படிப்பதே ஒரு பாக்கியம்... இந்தச் சுயசரிதத்தைப் படித்துவிட்டு புது உற்சாகமும் புதுத்தெம்பும் பெறாமல் எழுந்திருக்கிற மனிதன், மரத்துப்போன ஆன்மாவும் உள்ளமும் உள்ளவனாகத்தான் இருக்க முடியும்... இது எத்தனையோ மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கிறது. இப்போது உலகத்தின் மிகப் பழைய மொழிகளில் ஒன்றாகிய தமிழில் (மலையாளத்தில், தெலுங்கில், கன்னடத்தில்) இடம் பெறுகிறது.ஏ.ஆர்.வாடியா