Skip to content

அறுவகைச் சமயம்

₹70.00

அறுவகைச் சமயம் பற்றிய விரிவான ஆய்வு! மணிமேகலை காலம் முதல் உள்ள மரபுகளை ஆராய்கிறது.

Category Essay
Publisher பரிசல்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags History , Philosophy , Religion , Tamil Literature

Description

தமிழ்நாட்டில் 'அறுவகைச் சமயம்' என்ற வழக்கு மணிமேகலை காலம் முதல் காணப்படுகிறது. சமயம் என்பதும் தத்துவம் என்பதும் ஒன்றெனவே நமது முன்னோர்கள் கருதியதாகத் தோன்றுகிறது. ஏனெனில் உலகாயதம், வைசேடிகம், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களையும், சைவம், பிரம்மம், விஷ்ணுபாதம் முதலிய சமயங்களையும் சாத்தனார் 'சமயம்' என்றே குறிப்பிட்டார். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அப்போதே அப்படியே கருதினர்.இராமானுஜரும் அருள்நந்தித் தம்பிரானும் அறுவகைச் சமயம்' என்றே தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் அவர்கள் பெயர் குறிப்பிடும் சமயங்கள் பதினான்கு. அதோடு'சங்கற்ப நிராகரணம்' கூறும் அகச்சமயங்கள் ஏழும் சேர்த்தால் இருபத்து ஒன்று சமயங்களாகின்றன.சமயங்கள் ஆறு என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டார்கள் என்று சொல்லக்கூடிய இடம் எதுவும் இல்லை. எனவே ஒவ்வொரு காலத்திலும் இவ்வாறு ஆறெனக் கருதப்பட்ட சமயங்கள் எவை என்பதை அவ்வக்காலத்துச் சான்றுகள் கொண்டு ஆராய்ந்து, இது ஒருமரபுக் குறியீட்டு வழக்கே என்று ஆசிரியர் நிறுவியுள்ளார்.