Skip to content

சந்திரிகையின் கதை

₹100.00

பாரதியாரின் சந்திரிகையின் கதை! விதவை மறுமணம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மையமாகக் கொண்ட ஒரு வரலாற்று நாவல்.

Category Novel
Publisher பரிசல்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

வ.ரா.வின் சுந்தரி வெளியான மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், பாரதி. சந்திரிகையின் கதையை எழுதத் தொடங்கினார். தொடர்ந்து கநேசமித்திரனில் வெளியாகி வரும்போதே காலமாகிவிட்டார். கதை ஒன்பதாவது அத்தியாயத் தொடக்கத் துடன் முழுமையடையாமல் நின்றுவிட்டது. இந்த தாவலில் ஒரு சிறப்பான அம்சம், கற்பனையிலான நாவலாயிருந்தும் நிஜ வாழ்க்கையில் உள்ள வரலாற்று நாயகர்களையும் இணைத்துக் கதை புனைந்த உத்தியாகும். 1901ம் ஆண்டில் கதை தொடங்குவதாக பாரதியார் சொல்லி, அன்றிருந்த இரு பிரமுகர்களையும் தமது கதையில் கொண்டுவந்து நடமாடவிடுகிறார். விசாலாட்சி, குழந்தை சத்திரிகையையும் அழைத்துக்கொண்டு சென்னையில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்ரமணிய ஐயர் வீட்டுக்கு வருகிறாள். சமூக சேவையில் விதவா விவாகம் பல ஏற்பாடு செய்து பிராமண விதவைகளுக்கு விமோசனம் அளிக்கும் ஒரு நிருவாகத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணிய ஐயர் என்று கேள்விப்பட்டு விசாலாட்சி, தான் மறுமணம் விரும்புவதாகவும், அதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டு வருகிறான். சுப்ரமணிய ஐயர் உடனே ஒரு கடிதம் கொடுத்து, இராஜமகேந்திரத்திலிருக்கும் வீரேசலிங்கம் பந்துலுவைப் பார்க்கச் சொல்லி அனுப்புகிறார். இந்த இருவரும் விதவைகளின் துயர் துடைக்க, அவர்கள் மறுவாழ்வுக்காகப் பாடுபட்டு, விதவா விவாகத்தை ஆதரித்தவர்கள். சுப்ரமணிய பாரதி இவர்களைத் தமது கதையில் இரு பாத்திரங்களாகச் சேர்த்திருக்கிறார். சுப்பிரமணிய பாரதியாரின் இந்த சந்திரிகையின் கதை முற்றுப் பெற்றிருந்தால் தமிழ் நாவல் சரித்திரத்தில் இது ஒரு முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தபோதிலும், இந்த முற்றுப்பெறாத முற்றுப்பெறாத கதையே பல இடங்களில் ஆபூர்வ மெருகுடன் காணப்படுகிறது. சமுதாய விமர்சன வகை நாவல்களில் அன்றைய முக்கிய பிரச்சனையான விதவை மறுமணம் கருப்பொருளாயிருந்தாலும்,.சம கால சம்பவங்களும் சமூக காட்சிகளும் தெளிவாக ஆராயப்படுகின்றன.-தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி)சோ.சிவபாதசுந்தரம்