Skip to content

சங்ககாலத் திணைக்குடிகள்

இலக்கிய மானிடவியல் நோக்கு

₹240.00

சங்ககாலத் திணைக்குடிகள்: சங்க இலக்கியத்தை இலக்கிய மானிடவியல் நோக்கில் அணுகும் ஒரு முக்கியமான ஆய்வு நூல்.

Category Essay
Publisher பரிசல்
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Anthropology , Cultural Studies , Tamil Literature

Description

சங்க இலக்கியம், தமிழின் பெருமிதம்; தமிழ் அறிவின் அடையாளம். இதிலுள்ள அறிவு மரபினை இன்றைய ஆய்வுக் கண்ணோட்டத்தில் வெளிச்சமிட்டுக் காட்டுவது நமது கடமையாகும். இந்த நூல் இலக்கிய இனவரைவியல் நோக்கில் சங்க இலக்கியத்தை அணுகுகிறது. ஒரு முக்கியமான முன்னெடுப்பு இது.தமிழகத்தில் அதிகம் அறியப்படாத ஒன்று, முனைவர் கோ.சதீஸ் மானிடவியல் பயின்றவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலும், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியவர்.இலக்கணம், இலக்கியம், இரண்டிலும் தம் புலமைத் திறத்தைக் காட்டி வருபவர். ஏற்கனவே சில முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். இந்தப் பின் புலத்தில் சங்க காலத் திணைக் குடிகள் என்னும் இந்த நூலைப் படைத் திருக்கிறார்.தொல்காப்பியம் சார்ந்து தொல்தமிழரின் இனவரைவியலை முன்னெடுத் திருக்கிறார். சங்க இலக்கியம் காட்டும் சடங்கு முறைகள் ஒரு தனி இயலாக அமைகிறது. பண்டைத் தமிழரின் மணச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், வெறியாட்டுச் சடங்குகள், மழைச் சடங்கு எனத் தொல் தமிழரின் தனித்துவமான சடங்குகளைச் சதீஸ் விவாதிக்கிறார்.சங்க இலக்கியத்தில் காணப்படும் நகர அமைப்பும், பூம்புகாரின் தொல்லியலையும் மானிடவியலாக நம்வசப்படுத்துகிறார். அடுத்த அகநானூற்றைப் பண்பாட்டுச் சூழலியலாக முன்னிறுத்துகிறார். இத்தகைய தேடல் இலக்கிய மானிடவியலின் புதிய பரப்புகள். நிலம், உயிரினங்கள், மக்கள், குடியிருப்பு முதலானவற்றுக்குள் பிணைந்திருக்கும் உறவுகளைப் பேசுவதே சூழலியல்சார் மானிடவியல், நூலாசிரியர் சதீஸ் இப்பிரிவில் புதிய பேசுபொருளைக் காட்சிப் படுத்துகிறார்.இந்த நூல் ஒரு புதிய வரவு மட்டுமல்ல; புதிய அணுகுமுறையில் பேசும் நூலாகவும் உள்ளது. சதீஸ் மேன்மேலும் புதிய ஆக்கங்களைத் தரவேண்டுமென வாழ்த்துவோம்.மானிடவியல் பேராசிரியர்-முனைவர் பக்தவத்சலபாரதி