குரலும் பதிலும்
கு.ப. சேது அம்மாள் எழுதிய குரலும் பதிலும் - குடும்ப உறவுகள், பெண்களின் வாழ்க்கை மற்றும் சமூகச் சிக்கல்களைப் பேசும் சிறந்த நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
| SKU | 9789348942401 |
Description
நவீனத் தமிழ்ப் புனைகதைப் பெருக்கத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண் எழுத்தாளர்களும் தம் பங்கைச் செலுத்திவந்துள்ளனர். இந்த வகை முன்னோடிப் பெண் எழுத்தாளர்களில் கு.ப.ராஜகோபாலனின் சகோதரியான கு.ப. சேது அம்மாள் (1908-2002) ஒருவர். இவர் மணிக்கொடி கால பெண் எழுத்தாளராகத் தொடக்கம் பெற்று, இருபதுக்கு மேற்பட்ட நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். கு.ப.ரா.வின் உச்சத்தை இவர் அடையவில்லை என்றாலும் இவரது நாவல்கள், இடைத்தரமான பத்திரிகைக் கதைப்போக்கையும் பெண்களின் சித்தரிப்பையும் குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டவையே. வேங்கடலட்சுமி, குகப்ரியை, ஜெயலட்சுமி ஸ்ரீநிவாசன், கமலா பத்மநாபன், எம்.எஸ்.கமலா, கமலா விருத்தாசலம், சரோஜா ராமமூர்த்தி போன்ற பெண் எழுத்தாளர்களை சேது அம்மாளின் சமகாலத்தவராகவும் அவர்களுள் கலைத்தரத்தில் இவரையே முதன்மையானவராகவும் கருதலாம்.
கு.ப. சேது அம்மாளின் நாவல்களின் பிரதிநிதித்துவம் கொண்ட படைப்பாக இந்த குரலும் பதிலும் (1957) நாவலைக் கூறலாம். இதைத் தொடர்ந்து இவ்வரிசையில் சேது அம்மாளின் உயிரின் அழைப்பு (1966) என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப் பெற்றுள்ளது.
