Skip to content

பொட்டி சிறுகதைகள்

₹150₹142
5% OFF

கோ.சுனில்ஜோகி எழுதிய பொட்டி சிறுகதைகள் - நீலகிரிப் படகர்களின் வாழ்வியல், பழங்குடி மக்களின் கதைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.

Category Short Story
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society
SKU 9788119919130

Description

நீலகிரி மாவட்டம், பொறங்காடுசீமை, ஒரசோலைக் கிராமத்தைச் சார்ந்த முனைவர் கோ.சுனில்ஜோகி கோவை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நீலகிரி படகர்கள் குறித்த முதல் இனவரைவியல் புதினமான, ‘மாதி’. நீலகிரி படகர்கள் குறித்த முதல் சிறுகதைத் தொகுப்பான 'ஓணி' உள்ளிட்ட, படகர்களின் வாழ்வியலை மையமிட்ட இவரின் நூல்வரிசையில் மூன்றாவது நூலாக இந்த, 'பொட்டி' எனும் சிறுகதைத் தொகுப்பு திகழ்கின்றது. படகர், பழங்குடி வாழ்வியல் குறித்த 70 மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், 400 மேற்பட்ட கவிதைகள் உள்ளிட்ட ஆக்கங்களை அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியிட்டுள்ளார்.