தமிழ் மலையாள இலக்கிய உலகின் தனிப்பெரும் அடையாளங்கள் மீரானும் பஷீரும்
முனைவர் இரா. பிரபா எழுதிய தமிழ் மலையாள இலக்கிய உலகின் தனிப்பெரும் அடையாளங்கள் மீரானும் பஷீரும் - மீரான், பஷீர் படைப்புகளின் சமூகப் புரிதல்களும், இஸ்லாமிய இலக்கிய ஆய்வுகளும் இதில் உள்ளன.
| Category | Essay |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
| SKU | 9788199717473 |
Description
ஆய்விற்காகவே ஆய்வு என்பதாக அமையாமல், எதற்காக இத்தகைய ஆய்வுகள் என்ற கேள்விகள் அவசியம். பஷீரையும் மீரானையும் கொண்டாடுவதோ, அல்லது ஒப்பிலக்கிய நோக்கில் அவர்களைப் பதிவு செய்து தனக்கான புகழை நிலை நிறுத்துவதோ மட்டும் பிரபாவின் நோக்கமில்லை. பஷீரின் மொழிநடையில், அழகியலில் மட்டும் சொக்கிப் போயிருந்தால் கட்டுரைகள் இத்தகைய சாத்தியமில்லை.பஷீரின் ஆழ்ந்த இதயத்தைப் பிரபா உணர்ந்துள்ளார். தன்னுடைய சமூகம் பின் தங்கியுள்ளதே என்கின்ற மீரானின் ஆதங்கத்தைப் பிரபா உணர்ந்துள்ளார்.எனவே, ஆய்வில் ஒரு நிலைப்பாட்டைப் பிரபா எடுத்துள்ளார்.வறுமையையும் பெண்களின் நிலையையும் பிரபா தன் கட்டுரைகளில் பதிவு செய்ததற்கான காரணம், சமூகம் குறித்த ஆழ்ந்த புரிதல் இருப்பதால் தான்.
வெறும் தகவல்களும் மேற்கோள்களும் நிறைந்த கட்டுரைகளாக இல்லாமல், சமூகப் புரிதல்களுடன் கூடிய ஆய்வாக இருப்பதால், இக்கட்டுரைத் தொகுப்பு நூல், தமிழ் இஸ்லாமிய ஆய்வுலகிற்குப் பிரபா அளிக்கும் கொடையாக அமைந்திருக்கிறது.
-பா.இரவிக்குமார்
