திருப்பாவையும் ஆமுக்த மால்யதவும் – ஓர் ஒப்பீடு
முனைவர் க. அய்யனார் எழுதிய திருப்பாவையும் ஆமுக்த மால்யதவும் - ஓர் ஒப்பீடு. திருப்பாவை, ஆமுக்த மால்யத நூல்களின் ஒப்பீட்டு ஆய்வு, பக்தி இலக்கியம் மற்றும் பண்பாட்டு உறவுகளை விளக்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788119919314 |
Description
திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரு நூல்களிலும் உள்ள கருத்துகள் ஆமுக்த மால்யதவில் ஒன்றிப் போகிற இடங்களையும், விடுபாடுகளையும் இந்நூல் நுணுகி எடுத்துரைக்கிறது.ஆமுக்த மால்யவில் இடம்பெற்றுள்ள அரசர்கள் ஆட்சி முறை, கிளைக் கதைகள், பெரியாழ்வார், ஆண்டாள் பற்றிய கூடுதல் செய்திகளையும் இந்நூல் எடுத்துக்காட்டியுள்ளது. ஆமுக்த மால்யத காப்பிய பிரபந்த வளர்ச்சிக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் எழுந்ததால் இதனைக் காவியப்பண்பு கொண்டதாக விவரிக்க கிருஷ்ணதேவராயர் கருதியிருக்கலாம். இதுபோன்றே, திருமாலின் நான்கு அவதாரங்களை மட்டும் ஆண்டாள் விவரிக்க, கிருஷ்ண தேவராயர் திருமாலின் பத்து அவதாரங்களையும் விவரித்திருப்பதும் இவ்வகையில் எண்ணத்தக்கது.
ஆயர்பாடியின் சித்திரிப்புகள், திருமாலை உவமை, உருவகப்படுத்தும் இடங்கள், மகளிரை விளிக்கும் முறைகள் ஆகியன இடம்பெற்றுள்ள பாங்கை நூலாசிரியர் விரிவாக ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். ஒப்பிலக்கிய ஆய்விலும் இந்திய பக்தி இலக்கிய ஆய்விலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை இந்நூல் வழங்குவதோடு பண்பாட்டு உறவுக்கும் வழிவகுக்கிறது. நூலாசிரியர் முனைவர் க.அய்யனார் அவர்களுக்குப் பாராட்டுகள்.
-முனைவர் ப.டேவிட் பிரபாகர்
