உயிரின் அழைப்பு
கு.ப. சேது அம்மாள் எழுதிய உயிரின் அழைப்பு - குடும்ப உறவுகள், பெண்களின் வாழ்க்கை மற்றும் சமூகச் சிக்கல்களைப் பேசும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
| SKU | 9789348942722 |
Description
நவீனத் தமிழ்ப் புனைகதைப் பெருக்கத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண் எழுத்தாளர்களும் தம் பங்கைச் செலுத்திவந்துள்ளனர். இந்த வகை முன்னோடிப் பெண் எழுத்தாளர்களில் கு.ப. ராஜகோபாலனின் சகோதரியான கு.ப. சேது அம்மாள் (1908–2002) ஒருவர். இவர் மணிக்கொடி கால பெண் எழுத்தாளராகத் தொடக்கம் பெற்று, இருபதுக்கு மேற்பட்ட நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். கு.ப.ரா.வின் உச்சத்தை இவர் அடையவில்லை என்றாலும் இவரது சிறுகதைகள், இடைத்தரமான பத்திரிகைக் கதைப்போக்கையும் பெண்களின் சித்தரிப்பையும் குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டவையே, வேங்கடலட்சுமி, குகப்ரியை, ஜெயலட்சுமி ஸ்ரீநிவாசன், கமலா பத்மநாபன், எம்.எஸ்.கமலா. கமலா விருத்தாசலம், சரோஜா ராமமூர்த்தி போன்ற பெண் எழுத்தாளர்களை சேது அம்மாளின் சமகாலத்தவராகவும் அவர்களுள் கலைத்தரத்தில் இவரையே முதன்மையானவராகவும் கருதலாம்.கு.ப. சேது அம்மாள் எழுதிய 500க்கு மேற்பட்ட சிறுகதைகளில் அவரது பிரதிநிதித்துவம் துலங்குபவையாக இந்த உயிரின் அழைப்பு (1966) சிறுகதைகளைக் கூறலாம். இதைத் தொடர்ந்து இவ்வரிசையில் சேது அம்மாளின் குரலும் பதிலும் (1967) என்ற நாவலும் வெளியிடப் பெற்றுள்ளது.
