தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்
தமிழகத்தில் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கான குரல் ஏன் எழுப்பப்படவில்லை? திருப்பூர் குணாவின் இந்நூல் கேள்வி கேட்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பொன்னுலகம் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Islam , Politics , Social Issues |
Description
முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக் குறித்து முஸ்லிம்கள் மட்டுமே குரல் கொடுத்து வரும் நிலை இருந்து வருகிறது. ஏழு தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் பெரும்பான்மை தமிழக அமைப்புகள் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்பதில்லை. ஈழம் உள்ளிட்ட பொது பிரச்சனைகளில் முஸ்லிம்கள் தொடர்ந்து தலையிட்டு வரும் நிலையிலும் கூட "முஸ்லிம்கள் ஏன் பொது பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதில்லை?" என்று கேள்வி கேட்பவர்கள் , முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்காக தமிழக அமைப்புகள் ஏன் குரல் கொடுப்பதில்லை என்ற கேள்வியை எப்போதும் எழுப்புவதில்லை.இத்தகையவர்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் தான் திருப்பூர் குணா இந்நூலில் கேள்விகளை எழுப்புகிறார்.
