Skip to content

இந்திய வரலாற்றில் நிலவுடமைச் சமுதாயத்தின் தோற்றம்

₹45.00

இந்திய வரலாற்றில் நிலவுடமைச் சமுதாயத்தின் தோற்றம் குறித்து மார்க்சிய கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு.

Category Report
Publisher புதுமை பதிப்பகம்
Language Tamil
Year 2016
Format Paperback
Tags History , Marxism , Social Sciences

Description

இந்திய வரலாற்றில் வர்க்க ஆய்வை மறுத்து சாதி, மத, மொழி, இனம், பழங்குடி, பாலினம் போன்ற அடையாள அரசியலின் வரலாறாக கட்டியமைப்பதற்கு அடித்தளத்தை வழங்குவதுதான் ஆசிய உற்பத்தி முறை என்ற மார்க்சிய எதிர் கருத்து பரப்பப்படுவதன் உண்மையான நோக்கமாகும். அடையாள அரசியலை முன்னெடுத்து, வர்க்க போராட்டத்தை சீர்குலைப்பதே அவர்களின் உண்மையான நோக்கமாகும்.இந்தியாவில் விஞ்ஞானப் பூர்வமாக வரலாற்றை ஆய்வு செய்யும்போது ஆசிய உற்பத்தி முறைக்கு இடம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு வர்க்க ஆய்வை முன்வைப்பதற்கும், இந்திய நிலவுடமை பற்றிய புரிதல் முன்நிபந்தனையாகும். அத்தகைய புரிதலுக்கு ஒசாமூ கோண்டோ எழுதிய இச்சிறு வெளியீடு ஒரு தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையுடன். மிகக் கடினமான வாக்கிய அமைப்புகள் கொண்ட இந்த புத்தகத்தை அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் தனக்கே உரித்தான பாணியில் சிறந்தமுறையில் மொழிபெயர்த்த அன்புத் தோழர் ஆதிவராகன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.- பிரதீப், பதிப்பாளர்