ஜீவன் லீலா
அருவிகளின் லீலைகள்
காகா காலேல்கரின் 'ஜீவன் லீலா' நூலில் இந்தியாவின் நதிகள், அருவிகள், கடலோரங்களின் அழகிய பயண அனுபவங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | சாகித்திய அகாடெமி |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Indian Culture , Nature Writing , Travel Writing |
Description
காகா காலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும், ஹிந்தியிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்; காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஓயாமல் பயணம் செய்த சஞ்சாரி. இந்நூல் இவரது சொந்தப் பயண அனுபவங்களை அழகிய சொற்சித்திரங்களாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் எல்லா முக்கிய நதி தீரங்களையும், அருவிகளையும், கடலோரங்களையும் இதில் காண்கிறோம். இயற்கையின் எழிலிலே, குறிப்பாக நீரோரத்திலே - மறக்க முடியாத அனுபவங்களை நுட்பமாக வரைந்துள்ளார் ஆசிரியர். வரலாற்றின் நினைவுகளும், புராண இதிகாசங்களின் நிழல்களும், இலக்கிய அணிகளும் இவரது எழுத்திலே தெரிகின்றன. நதிகளை, 'பிரபஞ்சத்தின் தாய்மார்' என்கிறது மகாபாரதம். இந்நூலில் அத்தாய்மாரின் சீராட்டைக் கவியழகுடன் கூடிய கட்டுரைகளிலே வரைந்துள்ளார் ஆசிரியர்.
