Skip to content

நிலமிசை நீடு வாழ்பவர்

₹270₹256
5% OFF

பாவண்ணன் எழுதிய நிலமிசை நீடு வாழ்பவர் - காந்திய சிந்தனைகள், எளிய மனிதர்களின் வாழ்க்கை, ஊக்கமளிக்கும் கட்டுரைகள் மூலம் நம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் பெறுங்கள்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Philosophy and Thought

Description

இன்றைய உலகில் இலட்சியவாதத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளின் தத்துவம் ஒன்றே நமக்கு வழிகாட்டி. அவரோ, இந்த உலகில் எதிரி என ஒருவரையும் கருதாதவர். எவரையும் சுட்டிக் காட்டாதவர். செயல் ஒன்றே அவருடைய நோக்கம்; அடையாளம். அவர் சொல்லும் செயல் எதையும் செய்யக் கூடிய முதல் ஆள் அவரே.

அவரும் சரி, அவரது தொண்டர்களும் சரி, இந்த மண்ணில் வாழ்ந்த எளிய மனிதர்களை மனமார நேசித்தார்கள். அவர்களுடைய முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுதும் தொண்டாற்றினார்கள். அத்தகைய தொண்டர்களைப் பற்றிய சித்திரங்கள் பாவண்ணனின் இக்கட்டுரைகள். இன்றைய தலைமுறையினருக்கு இவை ஊக்கத்தையும் நம்பிக்கையையும் வழங்கும் ஊற்றுகள்.