பொன்மார் மாம்பாக்கம் கல்வெட்டுகள்
முத்துக்குமார் எழுதிய பொன்மார் மாம்பாக்கம் கல்வெட்டுகள் - சோழர் கால கல்வெட்டுகள், மாம்பாக்கம் வரலாறு மற்றும் பண்டைய ஊர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | History |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தலைநகரமாகக் காஞ்சிபுரம் ஒருபுறம், கடல் கடந்து சென்று திரும்பும் மரக்கலங்கள் நிறைந்து மிதக்கும் துறைமுகப்பட்டினமாக மாமல்லபுரம் மறுபுறம், இவ்விரு நகரங்களுக்கும் இடைப்பட்ட வழியில் அமைந்திருந்த கால்வாய் நாட்டில் காடு கொன்று நாடாக்கிய சிற்றூர்களாக மாம்பாக்கம், கண்டிகை, பொன்மார். கோட்டையூர், கிளாம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகியவை இருந்திருக்கின்றன.
மிகப்பெரிய ஏரி, அதன்கரையெங்கும் மாந்தோப்புகளும், விளை நிலங்களும் குடியிருப்புகளுமாகச் செழித்து நின்ற மாம்பாக்கம் கிராமத்தில் முருகேஸ்வரத்தாள்வர் (தற்போது முருகநாதீஸ்வரர்) கோயில் அமைந்திருந்தது. இக்கோயிலில் முதலாம் இராசராச சோழனின் (1011 ஆம் ஆண்டு காலத்திய கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் கூறும் சேதிகளை விரித்துரைத்து அவற்றின் மூலம் இந்நிலம், இதில் வாழ்ந்த மக்கள், இங்குள்ள ஊர்கள் அவற்றின் பெயர்கள், அப்பெயர்களுக்கான காரணங்கள் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியே இந்த நூல்.
