Skip to content

தமிழர் தலைவர்

தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

₹230₹218
5% OFF

சாமி. சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் - சமூக நீதி, சுயமரியாதை மற்றும் மனித உரிமைகளை வலியுறுத்தும் ஒரு முக்கியமான புத்தகம்.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 240
Year 2019
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?

- தந்தை பெரியார்