வீழ்வேனென்று நினைத்தாயோ?
கன்யூட்ராஜ் எழுதிய வீழ்வேனென்று நினைத்தாயோ? - தன்னம்பிக்கை, வாழ்க்கை வரம், மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழிகாட்டி. காந்தியக் கொள்கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 230 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
திருமலைக்கு வாழ்க்கை என்பது மானுடர்க்கு கடவுள் வழங்கிய அற்புதமான வரம். அதை ஒளியாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அவர் கண்டார். மகிழ்வான வாழ்வின் அடையாளமாக காந்திஜி திருமலைக்கு இருந்தார். காந்தியக் கொள்கைகளுக்குப் புதிய¬ விடியலைத் தந்தவர் திருமலை. உண்மையாலும், அன்பாலும்தான் நிஜமான மகிழ்ச்சியை அடைய முடியும் என்கிறார் திருமலை.
- டாக்டர் . ஜி. ராமச்சந்திரன், நிறுவநர் , காந்தி கிராமம்.
நம் நண்பரும் சகாவுமான திருமலையின் தியாகமும் சேவையும் இளைய தலைமுறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். நாட்டுச் சேவையில் அவர் சந்தித்த சோதனைகளையும் வேதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவை வளரும் தலைமுறைக்குப் பெரும் தூண்டுதலாக இருக்கும்.
- கே. அருணாசலம், தலைவர் , தேசிய காந்தி நினைவு நிதி
