Skip to content

நாடோடிக் கதைகள் (சத்யா எண்டர்பிரைசஸ்)

₹120.00

லதானந்தின் நாடோடிக் கதைகள்! சுவாரஸ்யமான கதைகள் மூலம் நீதி போதனைகள். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் கதைத்தொகுப்பு.

Category Short Story
Publisher சத்யா எண்டர்பிரைசஸ்
Language Tamil
Year 2026
Format Paperback

Description

சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஆலந்தூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவரும் சாவி. ஆனந்த விகடன், சக்திவிகடன் போன்ற இதழ்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவருமான திரு.ரவிபிரகாஷ், இந்த நூலுக்கு அளித்திருக்கும் அணிந்துரையில் இருந்து சில வரிகள்...!இந்தக் கதைகளைப் படிக்கிறபோது நாமே வேறோர் உலகத்தில் வாழ்வது போன்ற ஒரு சுவாரஸ்ய உணர்வில் திளைக்கிறோம். ஒவ்வொரு கதையிலும் இடம்பெறும் முக்கியம் செய்திகளைப் பற்றிய குறிப்பையும் கொடுத்துள்ளார் லதானந்த், 'பண்டூரா இசைக் கருவி, 'ஸ்டிங்ரே' வகை மீன்கள், 'காலாபாஷ்'மரம். நைஜீரியாவின் 'நரா' நாணயம் எனப் பலவற்றைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்கிறோம்.உங்களில் யாருக்காவது புரளி பேசும் குணம் இருந்தால் ரூடோவுக்குக் கடைசியில் நடந்ததை நினைத்துப் பாருங்கள். நிச்சயம் அதற்கப்புறம் புரளி பேசவே மாட்டீர்கள்!"'இப்போது யூருலு என்ற அந்த முயல் வேறெந்த மரத்தில் தேன் கூடு இருக்கிறது எனத் தேடிக் கொண்டிருக்கிறது. உதவிக்குக் கூப்பிட்டால் போய்விடாதீர்கள், கூடா நட்பு கேடாய் முடியும்!என ஒவ்வொரு கதையின் இறுதியிலும் லதானந்த் சேர்த்திருக்கும் வரிகள் ரசிக்க வைப்பதோடு, அந்தக் கதைகள் சொல்லும் நீதிகளை நம் மனத்தில் ஆழப் பதிக்கின்றன.எளிய தமிழ் நடையில் லதானந்த் எழுதியிருக்கும் இந்தக் கதை ஒவ்வொன்றும் தேன் மிட்டாயின் ருசி கொண்டது. சிறுவர்கள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்து ரசிக்கலாம்!படித்துப் பாருங்கள்; பலன் பெறுங்கள்!