Skip to content

இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)

₹100.00

பாகிஸ்தானிய நாவலான 'இறைவா'வின் தமிழ் மொழிபெயர்ப்பு! இந்தியப் பிரிவினை கால பின்னணியில் உருவான ஒரு மனதை உலுக்கும் கதை.

Category Novel
Publisher சீர்மை
Language Tamil
Year 2022
Format Paperback

Description

நடுநிசியில் அம்ரீக் சிங்குடைய மனைவியின் கற்பனையில் பள்ளிவாசலின் கிணறு அச்சம் மிகுந்த ஏப்பவொலியாக உருவெடுக்கும்போது அவளுடைய வயிற்றில் வளரும் வீரமிக்க படை கூச்சலிடத் தொடங்கிவிடும். சில நேரம் அவளுடைய காதுகளில் கிணற்றின் பிளிறல் இதயத்தைக் கீறுவதுபோல எதிரொலிக்கும். சில நேரம் கிணற்றின் வாய், தாடைகளைப் பிளந்துகொண்டு தன்னை நோக்கி வருவது போலவும் தோன்றும். ‘முல்லா அலீ பக்ஷ் கிணற்றுச் சுவர்களில் ஊர்ந்தவராக வெளியே வந்து கண் சிமிட்டுவதற்குள் கிணற்றின் மேற்பகுதியில் நின்று பாங்கொலியின் மூலமாக எப்போது சூனியம் செய்துவிடுவாரோ?’ என்ற அச்சம் அவளுக்கு எந்நேரமும் இருந்தது.- நாவலிலிருந்து ...