நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்
புத்தரைப் பற்றிய ஓஷோவின் சிந்தனைகளிலிருந்து..
மித்ர பூமி சரவணன் எழுதிய நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள் - சுய முன்னேற்றம், மன அமைதி, மற்றும் உள் ஒளியை கண்டறிய உதவும் சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 110 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality → Spiritual Awakening |
Description
இந்தப் புத்தகம் நீங்களே உங்களுக்கு ஒளியாக இருக்கப் பெரிதும் உதவும். நம்முடைய உள்ளொளியை நாம் கண்டுவிட்டால், நமக்கு நாமே ஒளியாக இருந்துவிட்டால், பிறகு நாமும் ஒரு புத்தராவதில் என்ன தடை வந்துவிடப் போகிறது?
நாம் ஞானமடைவதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்... நம்மைத் தவிர?ஒருவருடைய ஒளி மட்டுமே அவருக்குத் துணையாக இருக்க முடியும். அந்த ஒளி... ஒவ்வொருவருரிடமும் உள்ள உள்ளொளி! “நான் மக்களுக்குத்தான் பதில் சொல்வேன். கேள்விகளுக்கு எப்போதும் நான் பதில் சொல்வதில்லை.
ஆயிரம் முறை ஒரே கேள்வியே கேட்கப்பட வாய்ப்பிருக்கிறது. நான் ஓராயிரம் விதமாக அதற்குப் பதிலளிப்பேன். ஏனெனில் அந்தக் கேள்விகளைக் கேட்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள். அவர்களுடைய கேள்விகள் ஒன்றே போன்று தோற்றமளித்தாலும் அவை ஒருபோதும் ஒன்றாக இருக்கவே முடியாது” என்பார் ஓஷோ.
