சூது பவளம் கண்டேன் அல்லேன்
வி. சங்கரின் 'சூது பவளம் கண்டேன் அல்லேன்' நவீன தமிழ் கவிதைகளின் தனித்துவமான தொகுப்பு. ஆன்மீகமும், நவீனத்துவமும் கலந்த கவிதை அனுபவம்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | சிலேட் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
நவீன தமிழ் கவிதைகள் தன்னில் இருக்கவே கூடாது என வகுத்துக் கொண்ட மொழி மண்டலமும்,அதனால் உருவாகும் சரளமுமே வி. சங்கரின் கவிதைகள். ஆனால் நவீன தமிழ் கவிதைக்கு நிகரான கவிதை அனுபவத்தை இக்கவிதைகள் ஏற்படுத்துகின்றன.வி. சங்கரின் விஷேசமான மொழி மண்டலமும், சரளமும் தமிழ் மரபின் ஆழத்தில் இருந்து வருவது போன்ற தோற்றத்தை புறவயமாக ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் நவீன அம்சம் வெண்முரசில் பெறப்பட்டதாக இருக்கிறது.நவீன தமிழ் கவிதைகளில் கிழடு தட்டி போயிருக்கும் விறைத்த வசனத் தன்மையில் இது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஒரு காலம் தனது அடுத்த அடியை எடுத்து வைப்பதை இந்த கவிதைகளில் உணர முடிகிறது. இக்கவிதைகளின் அடி நாதமாக, நிழலாக பரவியிருக்கும் ஆன்மீகம் நவீன கவிதைக்கு புதியது. கவிதை அதன் விழிப்புத்தன்மையில் இருந்து விழிப்பற்ற தளத்துக்குள் புரண்டு திரும்புவதை சங்கரின் தொகுப்பு அறிவிக்கிறது.- லக்ஷ்மி மணிவண்ணன்
