பிரதாப முதலியார் சரித்திரம் (சுவடு பதிப்பகம்)
முதல் தமிழ் நாவல்
தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம்! மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் இந்த படைப்பு, அக்கால சமூகத்தை சித்தரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | Suvadu Pathippagam |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
Description
பிரதாப முதலியார் சரித்திரம் எனும் இந்த நாவல் தமிழின் முதல் உரைநடை நவீனம்.நாவலின் மொழிநடை நூற்றாண்டுகள் கடந்ததென்றாலும், புரிந்து கொள்ளும் வகையிலேயே அமைந்திருக்கிறது. அக்கால மொழிநடையில் மிகுந்திருந்த மொழிக்கலப்பு அகற்றப்பட்டு, தற்கால நடை எந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது என்பதை இக்கால வாசகர்களுக்கு இந்நூல் அறியத்தரும்.இந்த நூலிலுள்ள குறுங்கதைகள் மற்றும் சொல்லாடல்களை பாரதியார் தனது கட்டுரைகளில் எடுத்தாண்டிருக்கிறார். கறுப்பு-வெள்ளை காலந்தொட்டு அண்மைக்காலம் வரையிலான பல்வேறு திரைப்படங்களிலும் இந்நாவலில் வரும் பல நகைச்சுவைகள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன.கதாநாயகனை விடவும் வலுவான பாத்திரப்படைப்பாக அவருடைய தாய் மற்றும் மனைவியின் பாத்திரப் படைப்புகளை நூலாசிரியர் அமைத்துள்ளதன் வாயிலாக பெண்ணியப் பார்வையிலும் இந்த நாவல் முக்கியப் படைப்பாகத் திகழ்கிறது. மேலும் இந்த நாவலில் வேதநாயகம் பிள்ளை இறை நம்பிக்கையை வலியுறுத்தினாலும், மூட நம்பிக்கைகளைச் சாடவும் அவர் தவறவில்லை.
