திராவிடர் மீதான பார்ப்பனர்களின் எதேச்சதிகாரம்
பெரியார் ஈ.வெ.ரா எழுதிய 'திராவிடர் மீதான பார்ப்பனர்களின் எதேச்சதிகாரம்' புத்தகம், சாதி மற்றும் அரசியல் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வு.
| Category | Essay |
|---|---|
| Publisher | - |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Caste Discrimination , Social Justice , Tamil Politics |
Description
நீங்கள் உங்களை வேளாளர்கள் என்று அழைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். வன்னியர்கள் தங்களை சத்திரியர்கள் என அழைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். செட்டியார்கள் வைசியர்கள் என அழைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இதெல்லாம் எதற்காக? நீங்களே உங்களை தாழ்மைப்படுத்திக் கொள்வற்கு ஒப்பாகிறதே என்றால் "என்னய்யா! இப்பொழுதுதான் எங்கள் பெற்றோர்களை திருத்திக் கொண்டிருக்கிறோம். அதற்குள் இப்படி கீழே தள்ளுகிறீர்களே"என்கின்றனர்.நாடார் பெருமக்களும் ஆரியர் வழியைப் பின்பற்றுவது போன்று குறுக்கே பூணூல் போட்டிருந்தனர். அவைகளை எல்லாம் அறுத்து எறியுங்கள் என்கின்றபோது, ஒரு அன்பர் ஏனய்யா இவ்வளவு காலம் போராடி அந்தப் பூணூல் போடுவதற்கு இவ்வளவு காலம் ஆயிற்று. அந்த நூலில் அழுக்கு ஒட்டுவதற்கு முன் அறுத்தெறிய சொல்லுகிறீர்களே என்று வருந்தினர்.இவ்வாறு சத்திரியர் என்றும், வைசியர் என்றும். வேளாளர் என்றும் அழைத்துக் கொள்ள ஆசைப்படுவதும். பூணூல் போட்டுக்கொள்ள ஆசைப்படுவதும், தன் ஜாதியைத் தவிர. தனக்கு மேல் முதலியன பெரிய ஜாதி இருக்கிறதென்று ஒப்புக்கொண்டு தாங்கள் அந்த ஜாதிக்கு கீழ்ப்பட்டவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டவர்களாக ஆகிறார்கள்.
