சுதந்திரத்தின் நிறம்
கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறு! காந்திய வழியில் சமூக சேவையில் அர்ப்பணித்த ஒரு மாபெரும் ஆளுமை.
| Category | Biography |
|---|---|
| Publisher | தன்னறம் நூல்வெளி |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Hardcover |
| Tags | Biography , Indian History , Social Reform |
Description
காந்தியவழியில் தங்களை ஆற்றுப்படுத்தி, வினோபாவின் பூமிதான முன்னெடுப்பினை தமிழ்நிலம் முழுக்கப் பரவச்செய்து, லாப்டி அமைப்பை நிறுவி எளியோர்களுக்கான நலவாழ்வுக்காகவே தங்களுடைய வாழ்வினை அர்ப்பணித்த காந்தியவாதிகள் ‘கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ அவர்களின் வாழ்வுவரலாற்றை ‘சுதந்திரத்தின் நிறம்’ எனும் தலைப்போடு தன்னறம் நூல்வெளி வாயிலாகப் புத்தகமாக்கும் முயற்சியைத் துவங்கியுள்ளோம். லாரா கோப்பா ஆங்கிலத்தில் நேர்காணல்களாகப் பதிவுசெய்த நூலின் எளிய தமிழாக்கம் (மகாதேவன்) இந்நூல்.இப்புத்தகம். ‘மாற்று நோபல்பரிசு’ எனக் கருதப்படும் right livelihood award என்ற விருதைப் பெற்று, அதற்காக அவர்கள் தந்த பெரும் தொகையையும் எளியமக்கள் வசிப்பதற்கான வீடுகள் கட்டித்தர கொடுத்துவிட்டார் கிருஷ்ணம்மாள். இப்படியொருத்தரின் வாழ்வுப்பின்புலத்தையும் அதன் இயக்குவிசையையும், நம் தலைமுறையில் ஒவ்வொருத்தரும் அறிந்திருக்க வேண்டிய அகவரலாறாகவே கருதுகிறோம்.காந்தி, வினோபா இவர்களின் ஒற்றை வார்த்தையை வாழ்வுச்சொல்லாக ஏந்தி, அதே ஆத்மபலத்துடன் இறுதிவரை தளராத நம்பிக்கையோடும் கருணையோடும் மக்களுக்காக சேவையாற்றுகிற இந்த இணையர்களின் தன்சரிதையான இந்நூல் அவரவர் கோணத்தில் சொல்வதாக உள்ளது. இமயமலைப் பிரதேசங்களில் ‘சிப்கோ’ இயக்கம் மூலமாக மரங்களைக் காத்த காந்தியர் சுந்தர்லால் பகுகுணா அவர்களின் சிறுகுறிப்போடு இப்புத்தகம் முழுமையடைகிறது.
