Skip to content

தனிப்பாடல் திரட்டு (மூலமும்-உரையும்)

(பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் மற்றும் இராமச்சந்திரக் கவிராயர் பாடியவை)

₹100.00

தனிப்பாடல் திரட்டு நூலை வாங்க! சொக்கநாதப் புலவர், இராமச்சந்திர கவிராயர் பாடல்களின் தொகுப்பு. எளிய உரையுடன் கூடிய கவிதை.

Category Poetry
Publisher தேன்மொழி புக் சென்டர்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Classical Tamil , Poetry , Tamil Literature

Description

தமிழின் பெருமைக்கும், தமிழ்நாட்டில் நிலவி வருகின்ற இறை பக்திக்கும், தமிழ்க் கவிஞர்களின் புலமைச் சிறப்பிற்கும், தமிழர்தம் உயர்வுக்கும் நிலைபேறுடைய சான்றுகளாகத் திகழ்வன தனிப் பாடல்கள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் புலவர்களின் சிந்தனை வேகம் எப்படிக் கவிதையாக (பாடல்களாக) வெளிப்பட்டது என்பதையும், அந்தக்கால மக்களின் குணநலன்கள் எவ்வாறு இருந்தன என்பதையும், தனிப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. பக்தி உணர்வையும், புராண வரலாற்று செய்திகளையும் கற்பனை நயத்தோடு இத்தனிப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இவ்வகையில், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், இராமச்சந்திரக் கவிராயர் ஆகிய இருவரும் பாடியுள்ள தனிப் பாடல்களைத் தொகுத்து இப்பாடல்களுக்கு எளிய உரையினை எழுதி, 'தனிப்பாடல் திரட்டு' என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளேன்.இந்நூல் வெளிவருகின்ற இவ்வேளையில், இந்நூலின் உள்ளடக்கத் தெளிவிற்கும் உருவப் பொலிவிற்கும் காரணமாய் அமைந்த என் எழுத்துலக வழிகாட்டி, மன்னன்பந்தல் அன்பநாதபுரம் வகையறா அறத்துறைக் கல்லூரி (தன்னாட்சி), தமிழ் உயராய்வுத்துறையின் முன்னைத் தலைவர் 'நகைச்சுவைத் தென்றல்' பேராசிரியர் திருமிகு. சாமி. கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ., எம்.ஃபில்., அவர்களுக்கும், இந்நூல் உருவாக எனக்குத் தேவையான நூல்களைத் தந்துதவிய என் ஆய்வுலக வழிகாட்டி, தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவையின் மாநிலப பொதுச் செயலாளரும், பூம்புகார்க் கல்லூரி (தன்னாட்சி) தமிழ் உயராய்வு மையத்தின் முன்னைத் தலைவருமான 'செந்தமிழ்த் தேனருவி' முனைவர் கி. பாண்டியன் எம்.ஏ., பிஎச்.டி., அவர்களுக்கும்.