புத்தனின் விரல் பற்றிய நகரம்
தேர்ந்தெடுத்த கவிதைகள்
அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு 'புத்தனின் விரல் பற்றிய நகரம்'. தமிழ் கவிதையின் சிறந்த படைப்புகளில் ஒன்று!
| Category | Poetry |
|---|---|
| Publisher | தோழமை வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
Description
தமிழ்க் கவிதையில் வாசகர்கள் படிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலில் ஒருமுறை நான் திரு.அய்யப்பமாதவனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிக் குறிப்பிடும்போது திரு.மாதவனின் ஐம்பது கவிதைகளை நான் ஆதாரமாக கொண்டிருந்தேன். இப்போது இத்தொகுப்பின் முந்நூறுக்கும் மேலான கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் தெரிகிறது மாதவன் பலமான அஸ்திவாரம் கொண்டவர் என்பது.மற்றவர்களுக்கும் இவருக்கும் பொதுவான உணர்வுகள் சில உள்ளன. இந்த உணர்வுகள் சொந்த அனுபவத்தின் காரனமாக உருவானவை. பெரும்பாலும் இது இடம் அல்லது வெளி பற்றியதாகவே அமைந்துள்ளது. சென்னைக்கு வெளியிலிருந்து வந்த பலருக்கு சென்னையின் பிம்பம் ஒருவிதமாகக் காணப்படுகிறது.- ஞானக்கூத்தன்
