Skip to content

திருக்குறள் – கலைஞர் உரை

₹200.00

கலைஞர் மு. கருணாநிதியால் எழுதப்பட்ட திருக்குறள் உரையினைப் பெறுங்கள். தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷமான திருக்குறளைப் படியுங்கள்.

Category Poetry
Publisher யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Ethics , Philosophy , Tamil Literature

Description

“வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என் கருத்து எதையும் திணிக்காமலும் குறளில் அவர் கண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மை நிலையைக் கடைபிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டியவரையில் இந்தப் பொன்னாடையை செய்துள்ளேன்.“கடவுள் வாழ்த்து“ எனும் அதிகாரத் தலைப்பை “வழிபாடு“ எனக்குறித்துள்ளேன். வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்க வைக்க நான் விரும்பவில்லை. வழிபாடு எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான் எழுதியுள்ள உரைகளைக் கொண்டு இதனை உணரலாம்“ என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தனது முன்னுரையில் இந்நூலைப் பற்றி கூறியுள்ளார்.