Skip to content

வாழ்வின் பிரச்சினைகள் மீதான ஒளிவீச்சு

₹250.00

வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்க்கும் தத்துவ வழிகாட்டி! ஜேம்ஸ் ஆலனின் 'வாழ்வின் பிரச்சினைகள் மீதான ஒளிவீச்சு' புத்தகம்.

Category Essay
Publisher வள்ளியம்மை பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Philosophy , Psychology , Self-Help

Description

ஒரு மனிதன் ஓர் இருட்டறைக்குள் நுழையும்போது அந்த அறைக்குள் எவ்வாறு நகர்வது என்று தடுமாறுகிறான். சுற்றி உள்ள எந்த பொருளையும் அவனால் சரிவர காண முடியவில்லை. அவற்றின் மீது மோதி தன்னை காயப்படுத்திக் கொள்ளும் அபாயத்தில் இருக்கிறான். ஆனால் அங்கே ஓர் ஒளி வெளிச்சம் புகும்போது அந்த கனமே எல்லா குழப்பங்களும் நீங்குகின்றன. ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தில் இருப்பதை காண முடிகின்றது. அவற்றின் மீது மோதி காயம் படுவதற்கான அபாயம் இல்லை.பெரும்பான்மையானவர்களுக்கு வாழ்வு என்பதே இத்தகைய ஓர் இருட்டறையாகவே உள்ளது. அவ்வப்போது ஏற்படும் காயங்களாக அவற்றின் ஏமாற்றங்களும் குழப்பங்களும் துக்கங்களும் வலிகளும் உள்ளன. அறநெறி கோட்பாடுகள் குறித்து அவர்கள் உணராததால், அவ்வாறு உணராத காரணத்தால், அவற்றோடு எவ்வாறு இயைந்து செல்வது என்று தெரியாது அவற்றின் மீது தட்டு தடுமாறி மோதி காயம் படுகின்றனர். ஆனால், அறியாமை இருளுக்குள் மெய்யறிவின் ஒளி வெளிச்சம் புகும்போது குழப்பங்கள் மறைகின்றன, பிரச்சனைகள் கரைகின்றன. ஒவ்வொன்றும் அவற்றின் உண்மை நிலையில் உள்ளது உள்ளபடி தெரிகின்றன. மெய்யறிவின் புரிதல் என்னும் ஒளி வெளிச்சப் பார்வையின் துணையுடன் மனிதன் கண்ணைத் திறந்து காயம் படாமல் நடை போடுகிறான்.