எனவே…
₹40.00
இராசேந்திர சோழன் எழுதிய 'எட்டு கதைகள்' வாருங்கள் 70-களின் வட ஆற்காடு மக்களின் வாழ்க்கையை உணருங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | வம்சி புக்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
மனித உடல்கள் மண்ணில் மக்கி மறைந்து போய்விட்ட பின்பும்கூட ஒரு படைப்பாளிதான் அவர்கள் பேசிய மொழியை, பரவிய பஞ்சத்தை, வாழ்ந்த வாழ்வை, அப்போது பெய்த மழையை, அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறான். இராஜேந்திரன் சோழன் எழுபதுகளின் வடாற்காடு, தென்னாற்காடு வாழ் மக்களின் வாழ்க்கையை அப்படியே இந்த எட்டே எட்டு கதைகளுக்குள் அடக்கிவிடுகிறார். மனித உணர்வுகளினூடே ஒரு பத்திருபது வருஷமாவது ஊறிக் கிடந்தாலொழிய இக்கதைகளின் ஒரு வரியைக்கூட ஒரு எழுத்தாளன் எழுதிவிட முடியாது.