Skip to content

முற்றாத இரவொன்றில்

₹140.00

ம. காமுத்துரை எழுதிய 'முற்றாத இரவொன்றில்' நாவல், காதல், வீரம் மற்றும் சாதிப் பிரச்சினைகளை விவரிக்கிறது.

Category Novel
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2019
Format Paperback

Description

ஆயிரம் பக்க நாவல்கள் இன்று அனாயசமாக அச்சேற ஆரம்பித்து விட்டன. பிரச்சனையின் ஆதி தொட்டு, அகழ்வாராய்ச்சியில் இறங்கி அழகழகாக தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன.இங்கே சிறிய களம், நாவலாய் விரிந்துள்ளது. எனது கால் நூற்றாண்டு கால எழுத்துப் பயிற்சியின் தொடர்ச்சி என அனுமானிக்கிறேன். காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்ற கோஷங்களும் கோட்பாடுகளும் எதோ ஒரு சிதைவில் சந்திக்கின்றன.சாதீயம் எனும் மாபெரும் மாயப் பிசாசு ஒவ்வொரு மனிதனின் அணுவிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.அந்த நிஜத்தை உணர்ந்தாக வேண்டி இருக்கிறது. அது ஒவ்வொரு சாதிக்குள்ளும் இரு பிளவுகளைக் கொண்டு ஜீவிக்கிறது. அந்தப் பிரிவுகளில் உலகம் ஒடுங்குமானால் பிரச்சனைகள் கூர்மைப்படும். ஆனால் அசாத்தியமான செல்வழியில்தான் வர்க்கங்கள் வாயினைப் பிளந்து உறங்க வைக்கப்படுகின்றன.ஒருநாள் இரவில் நடக்கிற சம்பவத்தைச் சொல்கிற போது வாழ்வின் மிச்சம், தாழம்புதராக மணத்துக் காட்டுகிறது.- எழுத்தாளர் காமுத்துரை