Skip to content

ஜான் கிட்ஸ் ஆதவனைச் சந்தித்ததில்லை

₹250.00

தபசியின் 'ஜான் கிட்ஸ் ஆதவனைச் சந்தித்ததில்லை' கவிதைகள் நவீனத்துவத்தையும் ஆன்மீகத்தையும் இணைத்து எழுதப்பட்டவை. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher வேரல் புக்ஸ்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

தபசியின் கவிதைகள் எளிய சொற்கட்டுகளால் ஆனவை; நேரடித் தன்மை கொண்டவை. Simplicity is the glory of expression என்பார் அமெரிக்க கவிஞர் Walt Whitman. தபசியின் கவிதைகளுக்கு இது முழுக்க முழுக்க பொருந்தும். நவீனத்துவத்தை உணர்ந்து அதை சரியாக கையாளும் கவிஞர்களில் தபசி பிரதான இடம் பிடிக்கிறார். அவரின் உயர்அனுபவமும் ஆன்மீக விழைவும் சமூக அக்கறையும் கவிதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. Subjective ஆக மட்டுமே இல்லாமல் Objective ஆகவும் இயங்குவது அவர் கவிதைகளின் தனிச் சிறப்பு. துள்ளிச் செல்லும் நடையுடன் பயணிக்கும் தபசியின் சுவிதைகளில் பகடித் தன்மை அதன் உச்சம் பெறுகிறது. தபசியின் கவிதைகளுக்குள் நுழைந்து வெளியேறுவதென்பது மகத்தான ஒரு அனுபவம். The real book is not the one we read, but that one reads us என்கிறார் நவீன காலத்து கவிஞரான W.H Auden. தபசியின் ஒவ்வொரு கவிதைத் தொகுப்புமே இதற்குச் சான்றாகும். நவீன கவிதை குறித்த ஆழ்ந்த புரிதலோடு இயங்கும் தபசியின் கட்டுரைத் தொகுப்பாக 'மரபு என்பது நான்; நவீனத்துவம் என்பது என்னிலிருந்து விரைவில் வெளி வர உள்ளது. நவீன தமிழ்க் கவிதையை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தும் வலிமை தபசியின் கவிதைகளுக்கு உண்டென்றால் அது உண்மைக்குச் சற்றும் மிகையானதல்ல.-கரிகாலன்