Skip to content

தறிக்குழி

₹330.00

எஸ்தர் ராணியின் 'தறிக்குழி' நாவல், ஒரு கிராமத்தின் வீழ்ச்சியையும், சமூக வரலாற்றையும் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher வேரல் புக்ஸ்
Language Tamil
Year 2026
Format Paperback

Description

இருளிலிருந்து வாழ்வின் வெளிச்சத்திற்காக ஓயாமல் உழைத்த காலத்தின் நீண்ட சாட்சியங்கள்தான் தறிகள். நிறுத்தப்பட்ட தறியிலிருந்து எழும் சத்தத்தை உறக்கத்தில் கேட்டு திடுக்கிட்டு விழித்திருக்கிறீர்களா, உண்ணும்போது, உறங்கும்போது, நல்லது, கெட்டது என எல்லா சூழலிலும் நெசவாளிகளின் வாழ்வு தறியின் சத்தத்தோடு தான் பிணைந்திருக்கின்றன.பல சமயங்களில், நூலிழைகள் அறுந்துபோகும் தருணங்களில்தான் மனித வாழ்வின் நுட்பமான கலைகள் வெளிப்படுகின்றன. அதுவும் பசியோடிருக்கும் ஒருவனது கால்களும் கைகளும், முதுகும், ஓயாத வியர்வையும் ஒரு புடவையின் முழுமையான அழகை நிர்ணயிப்பதோடு தனக்கான கூலிக்கெனவும் ஓயாமல் இசைத்துக் கொண்டே இருக்கிறது.நெசவால் வாழ்ந்த ஒரு கிராமத்தின் வீழ்ச்சியை மட்டும் அல்ல, ஒரு தலைமுறையின் சாதி, உழைப்பு, இடம்பெயர்வு, முதுமை, தனிமை, காதல், மரணம் இவற்றின் வழியாக ஒரு சமூகத்தின் மறக்கப்பட்ட வரலாற்றை இந்த நாவல் கிளறிவிடுகிறது. தறியின் கதையையும், கிராமத்து மனிதர்களையும் பக்கத்தில் இருந்து நினைப்பவர்களுக்கு 'தறிக்குழி' சரியான தேர்வாக இருக்கும்.தரிசிக்கஅம்பிகா குமரன்