Skip to content

வேதாளம் விரும்பியச் சூதாட்ட சருக்கம்

₹180.00

அன்பாதவன் எழுதிய 'வேதாளம் விரும்பியச் சூதாட்ட சருக்கம்' சமூகத்தின் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher வேரல் புக்ஸ்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

ஒரு புனைவு கதையாகும் போக்கும், ஒரு நிஜம் கதையாகும் போக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை. ஒரு நிஜத்தைக் கதையாக்கும்போது அதன் வடிவத்தில் செய்திகளை அடுக்கிவைத்த தோரணையும், கட்டுரையின் சாயலும் வந்துவிடும் அது வாசிப்பவர்களுக்குப் பெரும் சிரமத்தைத் தரக்கூடும். இங்கு அன்பாதவன் அவர்களின் கதைக்களங்களும் கதை மாந்தர்களும் நிஜத்திலிருந்து பிறந்தவர்கள், செய்திகளின் வழியாக நாம் முன்னரே அறிந்தவர்கள். ஆனாலும் அவர்கள் ஆசிரியரின் சிறுகதை மனத்திற்குள் ஏற்படுத்தியிருக்கும் வீரியமான தாக்கம், அனுபவங்களின் தெளிவு, எளிமையான நடை, மொழியின் சரளம், சக மனித அறம் இவையெல்லாம் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்தியிருக்கிறது. இவரது கதைகள் ஏற்றத்தாழ்வு மிகுந்த நம் சமூகத் துயரங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆசிரியர் எடுத்துக்கொண்ட கதைக் களங்களில் பெண்களின் வலிகளையும், ஏக்கங்களையும், துயரங்களையும் பதிவு செய்வதோடு நிலத்தையும், வாழ்வியலையும், அடக்குமுறைகளையும், போராட்டங்களையும், அவலங்களையும், சம கால மனிதர்களின் உச்சபட்ச அதிகாரத் திமிரையும், வலிமை இல்லாதவர்களின் அழுகுரல்களையும் படைப்பாளியின் அறத்தோடு அணுகியிருக்கிறார் அனைவருக்கும் பிடிக்கும். அவசியம் வாசியுங்கள்.-பதிப்பாசிரியர்