Skip to content

இஸ்லாத்தில் இறை நம்பிக்கை

₹350.00

இஸ்லாத்தில் இறை நம்பிக்கை: ஹசன் அய்யூபியின் சிந்தனைகள் மற்றும் மனித உடலியல் குறித்த ஒரு தத்துவ ஆய்வு.

Category Essay
Publisher வேர்கள் பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Islam , Philosophy , Religion , Science

Description

ஜீரணமுறை பற்றி அவர் பின்வருமாறு எழுதுகின்றார்:நாம் உட்கொள்ளும் அத்தனையும் ஜீரணிக்கப்பட்டு விடுகின்றன. ஜீரணிக்கப்பட்டவற்றில் எவை எல்லாம் உடலுக்குத் தேவையோ அவையே நமது உடலோடு சேருகின்றன. நாம் உட்கொள்ளும் உணவு பல்வேறு பிரிவுகளாக வயிற்றில் வைத்துப் பிரிக்கப்பட்டு விடுகின்றன. அந்நிலையில் ஜீரணமுறை செயல்படத் தொடங்குகின்றது.தேவையற்ற கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்பட்டு விடுகின்றன. பயனுள்ள சத்துப்பொருள்கள் உடலோடு சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இப்படி உயிர்வாழத் தேவையானவை அனைத்தும் பெறப்படுகின்றன. வயிறு உடலுக்குத் தேவையான வற்றை சதா எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றது. உடலைத் தேவையான அளவு வளர்ப்பதற்கு உதவி செய்கின்றது. உடலில் காணப்படும் உயிரணுக்கள் அனைத்திற்கும் போதிய உணவு போய்ச் சேர்ந்தேயாக வேண்டும். நகம் தசைகள், கண்கள், காதுகள், எலும்புகள் ஆகியவற்றிற்கான உணவு தவறாமல் போய்ச் சேர்ந்தாக வேண்டும்."இன்னொரு விதத்தில் சொல்வதானால் நமது வயிறு ஒரு பெரிய ஆலைக்கு ஒப்பாகும். மனிதனால் நிர்மாணிக்கப்பட்ட ஆலைகளில் கூட அத்துணை நுணுக்கமான வேலை நடப்பதாகத் தெரியவில்லை. வயிற்றைப்போல் அதிக அளவு உற்பத்தி செய்கின்ற ஆலை ஒன்று மனிதனால் நிர்மாணிக்கப்பட்டதே இல்லை. அது ஒரு போக்குவரத்துத் துறை அதில் அணுவும் பழுதில்லை. நமது உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்கின்றன என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். உறுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும் நெறிமுறையும், அவை வேலை செய்யும் விதமும் ஓர் அமைப்பாளன் இருக்கின்றான் என்பதை அறிவுறுத்தவே செய்கின்றன. அவனே நமது தலைவன், அதிபதி, உணவளித்து வாழ வைப்பவன்."இதைப் போலவே அற்புதமானது மனித உடலிலுள்ள கண்களின் இயக்கம்.-President of New York Academy of Science Cracy Morrision-நூலிலிருந்து