Skip to content

பட்டினிப் புரட்சி

உழவு - உணவு - சூழல் - குமுகம்

₹450₹427
5% OFF

பரிதி எழுதிய பட்டினிப் புரட்சி - உணவுப் பற்றாக்குறை, சமூக ஏற்றத்தாழ்வுகள், இயற்கை வள அழிவு குறித்த முக்கியமான கேள்விகளுக்கு இந்நூல் பதிலளிக்கிறது.

Category Essay
Publisher விடியல்
Language தமிழ்
Pages 558
Year 2017
Format Hardcover
Tags Society and Economy

Description

சுமார் தொண்ணூறு லட்சம் உயிரின வகைகள் இவ்வுலகில் வாழ்கின்றன.மனித இனம் அவற்றில் ஒன்று.

740 கோடி மக்களும் பிற உயிரினங்களும் நலமாக வளமுடன் வாழ்வதற்குப் போதுமான வளங்கள் புவியில் உள்ளன. நம் தேவைக்கு அதிகமான அளவு உணவு உற்பத்தியாகிறது. இருப்பினும், பட்டினி , சத்துப் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.

நீர் , உணவு , உடை உடை ,வீடு ,கல்வி ,மருத்துவம் , வேலைவாய்ப்பு,சொத்துடைமை,இயற்கை வளங்கள் மீதான உரிமை ஆகிய அனைத்திலும் ஏற்றதாழ்வுகள் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றன. புவி வெப்பமடைகிறது , பருவநிலை மாற்றங்கள் தாறுமாறாக நிகழ்கின்றன ,வறட்சி கடுமையாகிறது, நிலம் , நீர், காற்று ஆகியன வேகமாக மாசடைந்து வருகின்றன.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்காண உயிரின வகைகள் உலகிலிருந்து அழிந்தொழிகின்றன. வரம்பற்ற நுகர்வை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமை , அதற்குச் சாதகமான அரசியல் முறைமை , பிற படிநிலைக் கூம்பக முறைமைகள் ஆகியன இந்த இழிநிலைக்குக் காரணங்கள்.

ஏன் ? எப்படி ? இந்த இழிநிலையை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? அதை எப்படிச் செய்வது ? இவற்றைக் குறித்து இந்நூலில் பார்க்கலாம்.